Wednesday, October 14, 2020

Me in Me:

Queen of my wisdom!

Enemy to my stupidity!

Originated so deep...

cast in heap...

She is stable and poise... 

Mellifluous is her voice...

Dwells in me!

She used to argue...

with my thoughts due.

She grows in me...

So unique and clever...

Blooms into a flower...

With my fruitful thoughts...

She breaks  into a thunder,

If something goes wrong with me.

She soothes me.

She boosts me.

She hooks me.

She is invisible, silent, and odorless,

To this world outside.

She is my Alma-mater,

self-established!

She is my Alter- ego,

Nourishing my spirits!

She is none but Me in Me!

My Intellectual Asset!

My Heart's treasure!

She is a perfect blend of

My Mind and Heart!

Thursday, October 08, 2020

வானம்பாடி :

ஞானம் தேடிச்  சென்றேன்...

கானம் ஒன்று கேட்டேன்.

எங்கோ வானில் மிதந்து  வந்தது ...

தேனாய் இசைத்தது  யார்?

உன்னை பற்றி சொல்லேன்? 

என்று காற்றில் வினவினேன் 

காற்றும் இனித்தது  அதன் குரலில்!

நான் ஒரு சுதந்திர பறவை!

வானில்  பறந்து கானம்  படுவதால்,

என் பெயர் வானம்பாடி என்றது!

வானின் அத்தனை மாடங்களிலும்  பாடுவேன்,

வசீகர  இசையால் என் இணையைத்  தேடுவேன்.

குயிலைப்போல நீயும் ஒரு பாடும் பறவையோ ?

இல்லை இல்லை என வேகமாய் மறுத்தது காற்று...

நான் குயிலைப்போல பொறுப்பற்றவன் அல்ல...

அனைத்து பறவைகளும் மரத்தில் கூடு கட்டிட,

நான் மட்டும் நிலத்தில் கூடு கட்டிடுவேன்!

வயல்களின் நடுவே, பெரிய மரத்தின் வேர்களுக்கிடையே,

என் கூட்டினை கண்டறிவது கடினம்...

அது என் சமயோஜிதம் .

கடவுள் எமக்களித்த வரத்தினால் ,

மூலிகை பல நானறிவேன்.

மலைகளிலும், மலைக் குகைகளிலும்  தேடி ,

நான் நீலக்கொடிவேலி முதலிய 

மூலிகை வேரிகளால்  பின்னி கூடு கட்டுவேன்..

என் முட்டைகளை , குஞ்சுகளை ,

நஞ்சு கொண்ட கீறி, மற்றும் பாம்பிடமிருந்து  காப்பேன்...

என பெருமையாய் சொன்னது!

இனிய துணை தேடி, அழகான இல்லறம் கண்டு,

பாசமான, பண்பான,  இல்லாளையும், பிள்ளைகளையும்,

நாளும் அன்புடன் பேணி காப்பவன்,

எல்லா ஞானமும்  பெறுவான்  என்றது!

கானமும் கேட்டேன் !

ஞானமும் பெற்றேன் !













Saturday, September 26, 2020

வா தோழி பால்யம் செல்வோம்: 
 
நான் நானாய் இருந்தேன்.
நீ நீயாய்  இருந்தாய்.
நாம் ஒன்றாய் பள்ளி சென்றோம்,
பாடங்கள் படித்தோம்,
பூச்சூடி மகிழ்ந்தோம் .
சேர்ந்தே உணவு புசித்தோம்.
எண்ணங்கள் பகிர்ந்தோம்.
கோவில் சென்று வணங்கினோம்.
ஓடி ஆடி விளையாடினோம்!
கனவுகள் கண்டோம் !
அனைத்தும் அழகாய், 
வெகுளியான உலகம் நமது.
அழுது வடிந்த என்னை,
உன் நட்புக்கரம் பற்றிய நாளை மறவேனோ...
நான் விழும் போதெல்லாம் ,
உற்சாகமாய் எழ வைத்தாய்!
பல்பத்திலிருந்து  பேனா  வரை,
உன் கையெழுத்தில்  என் பெயர்!
என் கையெழுத்தில் உன் பெயர்!
ஸ்லேட்டுகள், நோட்டுகள் தோறும் , 
வலம் வந்தது  அழகாய்!
என்றென்றும் நீங்கா நினைவாய் ,
நம் நெஞ்சகத்தில் பசுமையாய்,
கைக்குட்டையில் வைத்துக்  கடித்து,
பங்கிட்ட  மிட்டாயாய் இனிக்கிறது!
வா தோழி நம் பால்யம் செல்வோம்...
எனக்கு பிடித்த  ரோஸ் நிற உடையில் நீ !
உனக்கு பிடித்த பச்சை நிற உடையில் நான்!
நாம் இருவரும் பல்லாங்குழி ஆடலாம்.
பின் பாட்டுக்கள் சில பாடலாம்.
கதை கதையாய் பேசலாம்.
காலம் ஆடும் கண்ணாமூச்சியில் ,
இத்தனை ஆண்டுகள் கரைத்தோமடி...
எங்கோ அலைந்த மேகங்கள்,
ஒன்றாய்  கூடி அமுதம் பொழிந்தது போல்,
உன் தொலைபேசி எண்  கண்டுபிடித்து,
உன்னைக்  கண்டுபிடித்தேன் இன்று...
இன்று என் வாழ்வில்,
மிகவும் மகிழ்ந்த நாள் என்று குறிக்கப்படும்.
உன் அம்மா அடிக்கடி சொல்வார்கள்,
உங்கள் முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதென்று...
அப்படித்தான் என நினைத்தேன் இன்று...
மீண்டும் பால்யம் செல்லலாம் வா தோழி!

Friday, August 28, 2020

Imagination:
This is my world of Imagination!
It is filled with passion!
The images cluster in my mind,
often the root unable to find...
Rivers, Rainbows, Hills, Hues,
Clouds, Stars, Wind-mills, Dews,
Flash beneath my eye,
as they appeared in the dream...
Smell around me,
like a spell in the air...
Fly beyond my wisdom,
like the birds in the bosom of skies...
Auspicious occurs when I rejoice...
Divine occurs when I feel surrendered...
Tranquil occurs surrounded by the buds and kids...
Mused, Amused, and Used to imagine a world,
Often attached and detached from this world.
Here, Seeming beauty of  Images,
Unseen, Unfelt,  and Uninterrupted...
Sometimes assumptions are more real!
surreal often more real! 




 

Friday, March 09, 2012

பூஞ்சிட்டு :
இவள் எங்கள் பூஞ்சிட்டு !
பார்த்தால் பால் மொட்டு !
பேசினால் தேன் சிட்டு! 
இவள் எங்கள் அமுதசுரபி !
அன்பு சுரக்கும் தேனருவி...
சிரித்து மயக்கும் பூங்குருவி ...
இவள் பிரிக்க பிரியா பிரியத்தாள் ...
உரிக்க உரியா உறவுத்தாள் ...
இவள் எங்கள் வாழ்வின் வேர்!
எங்கள் பூக்களுக்கு நீர்!
இவள் பெயர் நியந்த்ரி...
சிவா- காயத்ரியின் புத்திரி!
வானம்பாடியின் வம்சம் வந்தவள் !
வாழையடி வாழையாய் வாழ பிறந்தவள் !!
அனைவரையும் அன்பால் ஆள  பிறந்தவள்!!!

Monday, December 06, 2010

வியாபாரம்

பண்டமாற்று...
 பொருள் கொடுத்து பொருள் வாங்குதல்... 
நயத்தக்க நாகரீகமாய் இருந்தது... 
வியாபாரத்தில் மனிதர்க்கு முதலிடம்... 
பொருளீட்ட நானயம் உதவியது.... 
 பணமாற்று... 
பணம் கொடுத்து பொருள் வாங்குதல்... 
நகைக்கத்தக்க நாகரிகமாய் இருந்தது... 
வியாபாரத்தில் பணத்திற்கு முதலிடம்... 
பொருளீட்ட நாணயங்கள் மட்டும் உதவுகின்றது...
  இங்கே கல்வியும், சாராயமும், பணம் கொழிக்கும் வியாபாரம்.... 
அரசியல் சிறந்த வியாபாரம்... 
அனைத்தும் வியாபாரம்... 
உலகமயமாதலில் தொலைந்து, 
தொலைவில் தெரிகின்ற கானல் நீராகி, 
கரைகின்றது உள்ளத்து சிந்தனைகளும்,
வேருக்கு நீராகாத மழை மேகத்தை போல...

வேடந்தாங்கல்

வானம்பாடியின் சுதந்திரத்தை கொடு... 
நம் வாழ்வாகும் இணைபிரியாத அன்றில்களைப் போல... 
அன்னப்பறவை போல என் குறைகளை விடுத்து,
நிறைகளை பார், நம் வாழ்வாகும் தென்றல் தீண்டும் வசந்தமாய் !
காக்கை பகிர்ந்துண்ணுவதை போல , 
நீயும் பகிர்ந்து கொள் உன் எண்ணங்களை.... 
பின் எல்லையில்லை நம் மகிழ்ச்சிக்கு! 
குயிலை போல உற்சாக குரல் கொடுப்பாய்,
நான் சோர்வுற்று அமரும் பொழுது...
பின் நித்தம் பொழியும் இன்பமென்னும் மழை! 
புறாவை போல சமாதனம் செய் நான் சண்டையிடும் பொழுது ....
சக்கரவாகம் அமுத மழை அருந்துவதை போல, 
நீயும் அருந்துவாய் என் அன்பு கலந்த தேநீரை... 
நம் வாழ்வாகும், வேடர்களற்ற , வேடங்களற்ற வேடந்தாங்கல் !

Tuesday, September 14, 2010

Wise and Fool

A Man is a Golden Impossibility. The line he must walk is a hair's breadth. The Wise through excess of wisdom is made a Fool - Emerson(From Experience).

Friday, March 14, 2008

மறதிப் பெருநதியில்

மறதிப் பெருநதியில் மூழ்கித் தான் போகின்றேன்,
 என்னையும் அறியாமல்... 
கேட்வால்வ் மூட மறக்கிறேன்...
துளி துளியாய் அதன்வழியே, 
தண்ணீர் சிந்தி சிந்தி, என்னை ஏளனம் செய்கிறது. 
கதவினை தாளிட மறக்கிறேன்...
மின்விசிறியினை அணைக்க மறக்கிறேன்... 
நான் செய்கின்ற ரசமான ரசத்தில், 
பெருங்காயத்தூள் சிறிது தூவ மறக்கிறேன். 
உடுத்தும் உடைக்கேற்ப விதவிதமாய், 
காதணி, வளையல் சூட மறக்கிறேன்.
இப்படி அவ்வப்பொழுது, மறதிப் பெருநதியில், 
மூழ்கித்தான் போகின்றேன். 
சிலவற்றை நானே மூழ்கடிக்க, நினைத்தாலும் முடிவதில்லை. 
சிறுவயதில் அக்கா டாடா காட்டாமல், 
சிடுசிடுவென பள்ளிக்குச் சென்றது. 
எதற்கெடுத்தாலும் நானும் அழுது, 
மற்றவர்களையும் நோகடிக்கச்செய்தவை... 
பிறரின் தேவையே இல்லாத, அறிவுரைகளும்,ஆளுமைகளும்...
உணர்வுகளை மதிக்காமல்,
மிதித்திட்ட சில தருணங்களையும், 
முழுதாய் மறதிப்பெருநதியில், மூழ்கிடுமாறு அழுத்துகின்றேன்... 
அப்பொழுது மூழ்கினாலும், 
எனக்கே தெரியாமல், எனது ஞாபகப் பெட்டகத்திற்குள், 
ரகசியமாய் நுழைந்துவிடுகிறது. 
மறக்க நினைத்த அத்தனையும் ஞாபகமாய்! 
மறதிப் பெருநதியில், ஞாபகப் பெட்டகத்துடன், 
நித்தம் பயனிப்பவர்களில், நானும் ஒருத்தி!  

Monday, February 04, 2008

முகம் :
சிங்கமென  கர்ஜிக்கும்  சில முகம்...
நரியென நலம் விசாரிக்கும் சில முகம்...
இப்படி பல முகங்கள்,
 நகல்களாய்  என் முன் நிழலாட...
நானும் தேடிச்  சென்றேன்,
மரக்கிளையில் அணில் முகத்தையும் ,
பூஞ்சோலையில் மான் முகத்தையும் ,
பாசத்தோடு நட்பு பாராட்ட...
ஆனால் அவையோ என் மனித முகம் கண்டு,
மிரண்டு ஓட ,
நித்தமும் காத்திருக்கிறேன் ...
தளரா நம்பிக்கையுடன்...
என் மேல் அணிலுக்கு, மானுக்கும் ,
நம்பிக்கை துளிர் விடுமென!

Sunday, February 25, 2007

நிலாக்காதலி

நிலாப் பொழுதுகள்,
நிசப்தத்தின் விழுதுகள்...
பூரண வெண் கதிரலைகள்,
பூரிப்பை உண்டாக்கும் அதிர்வலைகள்..
பிறைமதியில் பிள்ளைத் தமிழ்த் துளிர்வாள்...
நிறைமதியில் பாட்டன்கதைகள் பல ஒளிர்வாள்...
மேகத்திரை இவளை மூடினால்,
அனேகர்க்கு சோகத்திரை முகத்தை மூடும்...
பெண்குலத்தின் பேரழகி...
வெண்முகத்தின் ஓரழகி...
இளங்காதலர்க்கு இவளன்றி யார்தான் தூது...
இவளிடம் என்றுமில்லை சூதென்னும் வாது...
மதியழகை என்னென்று சொல்ல...
மதிமயக்கும் என்றாலது மிகையுமல்ல...
ஆதலினால் ஆழமாக அழுத்திச் சொல்வேன்...
நிலாக்காதலி நிஜமாக நானென்று!

Saturday, February 03, 2007

Love-Myth,Literature and History

Everyone know this month is too special for lovers. This month I have decided to post topics upon Love. Love is present there right from the creation of mankind. Each age has popular lovers like Aandal-Thirumaal; Radha-Krishna; Kunthavai-Vandhiyaththevan;  Prithviraj - Samyukthai etc in Myth, Literature, and History.
 Aandaal through her poems expressed her divine love towards God..No poet has expressed love as we find in the lines of Aandal... "Karpooram naarumo?, Kamalappoo naarumo? Thiruppavala chevvaai thaan thithithirukkumo? Marupposindha Madhavan than Vaaichchuvaiyum, naatramum Virupputru ketkinren,sollaazhi ven sange!". 
Kudhavai saved her father's kingdom with the help of a chivalrous man (Vandhiyaththevan) and then felt in love with him. Married her beloved man and lived a marvelous life. Her love for Vandhiyaththevan never disturbed her love for her people and kingdom. Her insight into things and her farsight in a way deepened their love.
Prithviraj threw away even his crown for the sake of his love towards Samyukthai... Nehru introduces Prithviraj as a reckless lover to us...His perspective of Love analyzing its causes can be seen through the oncoming lines... "Prithviraj is a popular hero, still famous in song and legend, for reckless lovers are always popular. He carried away the girl he loved him from the very palace of her father, Jayachandra, King of Kanauj, defying an assembled host of princelings who had come to offer court to her. He won his bride for a brief while, but at the cost of a bitter feud with a powerful ruler and the lives of the bravest on both sides. The chivalry of Delhi and central India engaged in internecine conflict and there was a mutual slaughter. And so, all for the love of a woman, Prithviraj lost his life and throne, and Delhi, that seat of Empire, Passed into the hands of an invader from outside. But his love story is sung still and he is a hero, while Jayachandra is looked almost as a traitor"

Tuesday, January 09, 2007

ஏதாவதொன்று

வீடுகள் வீதிகளில்
வீதிகள் ஊர்களில்
ஊர்கள் நாடுகளில்
நாடுகள் கண்டங்களில்
கண்டங்கள் உலகில்.

அத்தனையும் அடக்கம்,
ஏதாவதொன்றில்.

எழுத்துக்கள் வார்த்தைகளில்
வார்த்தைகள் வாக்கியங்களில்
வாக்கியங்கள் மொழிகளில்.

வெங்காயத்தோல் போல,
உரிக்க உரிக்க உரிக்க,
வந்துகொண்டேதான் இருக்கிறது,
ஏதாவதொன்று ஏதாவதொன்றிலிருந்து.

மாடுகள் அசை போடுவதைப்போல,
மனமும் அசை போடுகிறது
எப்பொழுதும் ஏதாவதொன்றை...

Wednesday, January 03, 2007

மௌனப்பதிவுகள்-II









Wednesday, December 27, 2006

மௌனப்பதிவுகள்- I

ஆயிரம் கலைகள் பேசும்,
காலத்தால் அழியா சிலைகள்;
தெள்ளிய வானிலே,
நொடிக்கொரு முறை,
தன்னுருவை மாற்றி,
வாழ்க்கை பாடம் கற்பிக்கும்,
மேதை மேகங்கள்;
தன்னை தானறிய,
எத்தனிக்கும் மௌனிகள்;
என நினைத்துப் பார்க்கையில்,
இரைச்சலுக்கிடையில்,
இன்பமாய் உறங்கிக் கொண்டிருக்கும்,
மலர்க் குழந்தையும், கொடித் தாயும்,
மௌனப் பதிவுகள் தாம்.

Thursday, November 16, 2006

Morning, Noon and Night

Soothing sun-rise...  
A cup of Tea... 
Books to arise... 
Songs of cuckoo for Me! 
Raining noon... 
Calls to fill the gap... 
A nap as a boon... 
Dropping rain for my sap... 
Multiple colors of Twilight... 
Fresh mind to muse... 
Moon's rays to delight... 
Cheerful children to amuse!

Friday, September 08, 2006

கவிதைகள்

என்னவள் 
அம்மாவாசையாய் இருண்டு கிடந்த என் மனதில்,
 குடிபுகுந்தாள் என்னவள்! 
பிறைநிலா புன்னகை சிந்தி, 
நம்பிக்கை நட்சத்திரத்தை,
என்னுள் விதைத்து, என் வாழ்வை வளர்பிறையாக்கி, 
முழுநிலவாய் கலந்துவிட்டாள், என் ஜீவனில்! 

அவள்- என் கனவுப்பெண் 
களங்கமில்லா நிலவு அவள் மனது! 
பசுமை மாறா நிலம் அவள் நினைவு!
திகட்டா இனிமை அவள் சொல்! 
தடையில்லா வளர்ச்சி அவள் கலை!

வறுமை
உன் வெண்டை விரல்களுக்கு,
மோதிரமும் வேண்டுமோ? 
உன் வெள்ளை கால்களுக்கு,
வெள்ளி கொலுசும் வேண்டுமோ? 
உன் புன்னகையே போதும், 
பொன்னகை எதற்கடி?
என தன்னை தானே, தேற்றிக்கொண்டான், 
வறுமையில் வாடும் தந்தை...


Sunday, July 16, 2006

Scribblings

Mind floats in thoughts few.
Fractions bringing something new.
Life blooms getting a view...
Happy tunes tuned to chew.

What is Life?
Cares and concerns...
Joys and tears...
Files of thoughts...
Piled upon one another... 
It's God's gift...
Gifted are the Living souls! 
It's an order in disorder,
A lift to lift!

Wednesday, June 21, 2006

பூக்களின் காதலன்

பூக்களை நேசிக்கும் நான், 
நித்தம் தரிசிப்பேன் கோடானு கோடி காதலிகளை! 
எனக்கு சிறகுகள் வாய்த்ததே, 
அதற்குத்தான் என்பேன். 
அவர்களை சுற்றி சுற்றி வருவேன்.
பாசமாய் வருடிச் செல்வேன். 
ஒருத்தியிடம் கூட சொன்னதில்லை, 
நான் நேசித்த சங்கதியினை. 
நிராகரிப்பை நிராகரிப்பவன் நான். 
ஒருவேளை என்னை நிராகரித்தால்,
நிராயுதபாணி ஆவேனல்லவா? 
நிறங்களை சுமக்கும் தேவதைகள், 
என் அருமை காதலியர். 
நிறமில்லாத நான் எப்படி உரைப்பேன்?
என் வானவில் காதலை?
ஒற்றைக் காலிலாவது நிற்கின்றனர், 
என் அழகு நாயகியர். 
நில்லாதவன் நான் என்பதால்- 
காதலை சொல்லாதவன் என ஆனேன். 
ஒவ்வொருத்தியிடமும் தனித்துவமாய், 
ஒவ்வொரு ஸ்வாசம், ஒவ்வொரு வாசம்! 
என் ஸ்வாசத்தில் ஏற்றிச்செல்வேன், 
என்னவள்களின் பூ வாசம். 
மெல்லியலாள் என மனதில் கொஞ்சுவேன்! 
மெல்லிசை காதினில் ஓதுவேன்! 
சில சமயம் வல்லியனாகி, 
அவர்களை ஆட்டிப்படைப்பேன். 
பின் அதற்காக அழுது வருந்துவேன்.
என்னை புயலாய்ப் பார்க்க, 
எனக்கே பிடிப்பதில்லை. 
ஏனென்றால் நான் பூங்காற்று. 
பூக்களின் காதலன்!

Wednesday, June 07, 2006

Nostalgia

To my poem "Pidiththavai", I received a humorous comment asking me when I will become mad..or when I start liking madness (Eppo ungalukku paithiyam pidikkum)...Mused on this very topic for some time and wrote the following... Ha Ha Ha... To tell the world that I am already having a likingness towards madness...Yeah Shakespeare himself declares that "There is a method in the madness".In that way, everyone is mad about something or other..Iam mad of the pastness of the past.

Nostalgia
I am from a city named Nostalgia.
Here houses were built with bubbles of thoughts. 
Countless windows carry yesterday's flavor.
Curtains swing with aesthetic air... 
Trees, Birds, Clouds, and stars... 
Thorns, Bushes, Tears, and ashes... 
All sing an eternal song upon pastness of the past... 
Roads run backward... 
Drenched with dried rain...
So the minds run ...
Dwellers of this city dwell in dreams... 
Passing days pass each a dream... 
History is the subject that we read.
People here sow their dreams 
And reap them today or tomorrow... 
Bidding bye to sorrow... 
And I am proud of being nostalgic...
Please never call it a sickness.
I'm fond of that stiffness.