Monday, February 04, 2008

முகம் :
சிங்கமென  கர்ஜிக்கும்  சில முகம்...
நரியென நலம் விசாரிக்கும் சில முகம்...
இப்படி பல முகங்கள்,
 நகல்களாய்  என் முன் நிழலாட...
நானும் தேடிச்  சென்றேன்,
மரக்கிளையில் அணில் முகத்தையும் ,
பூஞ்சோலையில் மான் முகத்தையும் ,
பாசத்தோடு நட்பு பாராட்ட...
ஆனால் அவையோ என் மனித முகம் கண்டு,
மிரண்டு ஓட ,
நித்தமும் காத்திருக்கிறேன் ...
தளரா நம்பிக்கையுடன்...
என் மேல் அணிலுக்கு, மானுக்கும் ,
நம்பிக்கை துளிர் விடுமென!