Thursday, December 31, 2020

திருப்பாவை பாசுரம் 16



நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே, கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்,
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

Wednesday, December 30, 2020

திருப்பாவை பாசுரம் 15



எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
     வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
     வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

Tuesday, December 29, 2020

திருப்பாவை பாசுரம் 14





உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
     செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
     தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
     நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
     பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்

Monday, December 28, 2020

திருப்பாவை பாசுரம் 13



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

Sunday, December 27, 2020

திருப்பாவை பாசுரம் 12



கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி
     நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
     பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
     மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
     அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்


Saturday, December 26, 2020

திருப்பாவை பாசுரம் 11

 


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Friday, December 25, 2020

திருப்பாவை பாசுரம் 10






நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


Thursday, December 24, 2020

Wednesday, December 23, 2020

திருப்பாவை பாசுரம் 8





கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


Monday, December 21, 2020

திருப்பாவை 7





கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!









திருப்பாவை 6




புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

Sunday, December 20, 2020

திருப்பாவை 5



மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் 
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது 
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் 
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 

Saturday, December 19, 2020

திருப்பாவை - பாசுரம் 4:

 


திருப்பாவை - பாசுரம் 4: 
 
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday, December 18, 2020

திருப்பாவை பாசுரம் 3





ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Thursday, December 17, 2020

திருப்பாவை: பாசுரம் 2

 
வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்! 

Wednesday, December 16, 2020



 திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

Saturday, December 05, 2020

என் உள்ளம் கவர்ந்த பாரதியாரின் கவிதை

 

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

In this poem, the Revolutionary poet,  Bharathi asks the All-powerful God some boons to purify his spirits in order to achieve the ultimate happiness. The first stanza opens up with his mind's confused state on seeing the people who suffer from their own thoughts and give agony through their wretched acts. The people indulge in base things and continue to be in distress in their whole life-cycle. This continues till their death. The poet likes to find a solution for the mundane miseries.

The act of consuming food ,
For the body's sake continues,
yet no food for thought.
Giving too much time for meager gossips,
The mind gets numb with agony.
Still offer sufferings to others, 
Through our wretched acts.
This form gets old and dies one day...
My dear God, Do you think
My life too will sink , 
vague and vain?
like these petty creatures?

I ask you some boons 
Bestow me those  soon
Destroy all the evil karmas from my past.
It should not grow and last 
Restore me with a life new!
Demolish all my sorrows.
Keep my mind pure and
Give me the ultimate Happiness!





Monday, November 23, 2020

Translation

  I have translated  Robert Frost's poem into Tamil. This poem from the Romantic age describes how we get stuck amidst the cobwebs of the beauties of nature and our duties to be done. Here, the poet makes us aware that we should never get immersed in these worldly pleasures as it always attracts. We should refresh ourselves from nature,  and have to travel towards our dream or goal. To me, the Protagonist of this poem resembles the character of "Vandhiyaththevan" from "Ponniyin Selvan". He always gets stuck into worldly pleasures and continues his journey. Finally, he succeeds in achieving his goal

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.   
His house is in the village though;   
He will not see me stopping here   
To watch his woods fill up with snow.   

My little horse must think it queer   
To stop without a farmhouse near   
Between the woods and frozen lake   
The darkest evening of the year.   

He gives his harness bells a shake   
To ask if there is some mistake.   
The only other sound’s the sweep   
Of easy wind and downy flake.   

The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep.
                                                - Robert Frost.


 கானகத்திடை  ஒரு பனி பொழியும்  அந்திப் பொழுது 

இந்த காடு யாருடையது என யூகிக்கிறேன் .
அவனது வீடு பக்கத்து கிராமத்தில் உள்ளது போலும்;
நான் இவ்விடம் வந்தது பற்றியும் ,
பனி படர்ந்த காட்டினை  ரசிப்பதையும் அறியான் .

என்னுடைய இளங்குதிரையும் குழம்பியிருக்க கூடும்,
இளைப்பாற  இங்கு குடில் ஏதுமில்லை என 
காட்டிற்கும்  உறைந்த ஏரிக்கும்  இடையே - 
இந்த ஆண்டின் மிகையான  இருள் படர்ந்த  இரவு 

தன்  கழுத்தினை அசைத்து மணியோசை எழுப்பிற்று 
உனக்கு எதுவும் சிக்கலா என கேட்பது போல .
இன்னொரு ஓசையும் காதை எட்டியது 
மென்பனியை வருடிச்செல்லும் தென்றல்.

காட்டில் பொழியும் அழகும், ஈர்க்கும்  அடர் இருட்டும் ,
அழைக்கிறது என் நெஞ்சின்  கனவும், ஏற்ற கடமையும்,
செல்ல வேண்டும் பல காத தூரம்  இலக்கை  அடைந்திட,
செல்ல வேண்டும்  பல காத தூரம், வென்று  நீங்கா துயில் கொள்ள.


                                                                                                  -    ராபர்ட் பிரொஸ்ட் 

Wednesday, October 14, 2020

Me in Me:

Queen of my wisdom!

Enemy to my stupidity!

Originated so deep...

cast in heap...

She is stable and poise... 

Mellifluous is her voice...

Dwells in me!

She used to argue...

with my thoughts due.

She grows in me...

So unique and clever...

Blooms into a flower...

With my fruitful thoughts...

She breaks  into a thunder,

If something goes wrong with me.

She soothes me.

She boosts me.

She hooks me.

She is invisible, silent, and odorless,

To this world outside.

She is my Alma-mater,

self-established!

She is my Alter- ego,

Nourishing my spirits!

She is none but Me in Me!

My Intellectual Asset!

My Heart's treasure!

She is a perfect blend of

My Mind and Heart!

Thursday, October 08, 2020

வானம்பாடி :

ஞானம் தேடிச்  சென்றேன்...

கானம் ஒன்று கேட்டேன்.

எங்கோ வானில் மிதந்து  வந்தது ...

தேனாய் இசைத்தது  யார்?

உன்னை பற்றி சொல்லேன்? 

என்று காற்றில் வினவினேன் 

காற்றும் இனித்தது  அதன் குரலில்!

நான் ஒரு சுதந்திர பறவை!

வானில்  பறந்து கானம்  படுவதால்,

என் பெயர் வானம்பாடி என்றது!

வானின் அத்தனை மாடங்களிலும்  பாடுவேன்,

வசீகர  இசையால் என் இணையைத்  தேடுவேன்.

குயிலைப்போல நீயும் ஒரு பாடும் பறவையோ ?

இல்லை இல்லை என வேகமாய் மறுத்தது காற்று...

நான் குயிலைப்போல பொறுப்பற்றவன் அல்ல...

அனைத்து பறவைகளும் மரத்தில் கூடு கட்டிட,

நான் மட்டும் நிலத்தில் கூடு கட்டிடுவேன்!

வயல்களின் நடுவே, பெரிய மரத்தின் வேர்களுக்கிடையே,

என் கூட்டினை கண்டறிவது கடினம்...

அது என் சமயோஜிதம் .

கடவுள் எமக்களித்த வரத்தினால் ,

மூலிகை பல நானறிவேன்.

மலைகளிலும், மலைக் குகைகளிலும்  தேடி ,

நான் நீலக்கொடிவேலி முதலிய 

மூலிகை வேரிகளால்  பின்னி கூடு கட்டுவேன்..

என் முட்டைகளை , குஞ்சுகளை ,

நஞ்சு கொண்ட கீறி, மற்றும் பாம்பிடமிருந்து  காப்பேன்...

என பெருமையாய் சொன்னது!

இனிய துணை தேடி, அழகான இல்லறம் கண்டு,

பாசமான, பண்பான,  இல்லாளையும், பிள்ளைகளையும்,

நாளும் அன்புடன் பேணி காப்பவன்,

எல்லா ஞானமும்  பெறுவான்  என்றது!

கானமும் கேட்டேன் !

ஞானமும் பெற்றேன் !













Saturday, September 26, 2020

வா தோழி பால்யம் செல்வோம்: 
 
நான் நானாய் இருந்தேன்.
நீ நீயாய்  இருந்தாய்.
நாம் ஒன்றாய் பள்ளி சென்றோம்,
பாடங்கள் படித்தோம்,
பூச்சூடி மகிழ்ந்தோம் .
சேர்ந்தே உணவு புசித்தோம்.
எண்ணங்கள் பகிர்ந்தோம்.
கோவில் சென்று வணங்கினோம்.
ஓடி ஆடி விளையாடினோம்!
கனவுகள் கண்டோம் !
அனைத்தும் அழகாய், 
வெகுளியான உலகம் நமது.
அழுது வடிந்த என்னை,
உன் நட்புக்கரம் பற்றிய நாளை மறவேனோ...
நான் விழும் போதெல்லாம் ,
உற்சாகமாய் எழ வைத்தாய்!
பல்பத்திலிருந்து  பேனா  வரை,
உன் கையெழுத்தில்  என் பெயர்!
என் கையெழுத்தில் உன் பெயர்!
ஸ்லேட்டுகள், நோட்டுகள் தோறும் , 
வலம் வந்தது  அழகாய்!
என்றென்றும் நீங்கா நினைவாய் ,
நம் நெஞ்சகத்தில் பசுமையாய்,
கைக்குட்டையில் வைத்துக்  கடித்து,
பங்கிட்ட  மிட்டாயாய் இனிக்கிறது!
வா தோழி நம் பால்யம் செல்வோம்...
எனக்கு பிடித்த  ரோஸ் நிற உடையில் நீ !
உனக்கு பிடித்த பச்சை நிற உடையில் நான்!
நாம் இருவரும் பல்லாங்குழி ஆடலாம்.
பின் பாட்டுக்கள் சில பாடலாம்.
கதை கதையாய் பேசலாம்.
காலம் ஆடும் கண்ணாமூச்சியில் ,
இத்தனை ஆண்டுகள் கரைத்தோமடி...
எங்கோ அலைந்த மேகங்கள்,
ஒன்றாய்  கூடி அமுதம் பொழிந்தது போல்,
உன் தொலைபேசி எண்  கண்டுபிடித்து,
உன்னைக்  கண்டுபிடித்தேன் இன்று...
இன்று என் வாழ்வில்,
மிகவும் மகிழ்ந்த நாள் என்று குறிக்கப்படும்.
உன் அம்மா அடிக்கடி சொல்வார்கள்,
உங்கள் முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதென்று...
அப்படித்தான் என நினைத்தேன் இன்று...
மீண்டும் பால்யம் செல்லலாம் வா தோழி!

Friday, August 28, 2020

Imagination:
This is my world of Imagination!
It is filled with passion!
The images cluster in my mind,
often the root unable to find...
Rivers, Rainbows, Hills, Hues,
Clouds, Stars, Wind-mills, Dews,
Flash beneath my eye,
as they appeared in the dream...
Smell around me,
like a spell in the air...
Fly beyond my wisdom,
like the birds in the bosom of skies...
Auspicious occurs when I rejoice...
Divine occurs when I feel surrendered...
Tranquil occurs surrounded by the buds and kids...
Mused, Amused, and Used to imagine a world,
Often attached and detached from this world.
Here, Seeming beauty of  Images,
Unseen, Unfelt,  and Uninterrupted...
Sometimes assumptions are more real!
surreal often more real!